மனு கொடுக்க வந்த மக்களுக்கு வித விதமாய் விருந்து - அசத்திய தஞ்சை ஆட்சியர்

x

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்க வந்த இடத்தில் உணவு வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட் கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டத்தில் கலந்து கொன்டவர்கள் அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயார் செய்யப்பட்ட இனிப்பு பொங்கல், எலுமிச்சை சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், தயிர்சாதம், காய்கறி வகைகள், பரிமாறப்பட்டது. மனு கொடுக்க வந்த இடத்தில் உணவு வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்