கிராம சபை கூட்டத்தில் திடீர் பரபரப்பை கிளப்பிய VAO - கொந்தளித்த ஊர் மக்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பேச அனுமதி இல்லை என கிராம நிர்வாக அலுவலர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கிராம சபைக் கூட்டத்தில் தபால் நிலையம் கட்ட கிராம மக்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். அதனை தடுத்தி நிறுத்திய கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன், தபால் நிலையம் அமைய உள்ள இடத்தில் வீ.ஏ.ஓ குடியிருப்பு அமைய உள்ளதாக கறாராக பேசினார். மேலும், ஊராட்சி தலைவரைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என அவர் கூறிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்