வி.ஏ.ஓ. அதிரடி கைது - சி.பி.சி.ஐ.டி போலீசார் நடவடிக்கை | Ranipet | VAO Arrest

x

ராணிபேட்டையில் விவசாயிகளுக்கு வழங்கிய நெல் விற்பனைக்கான அடங்கலில் மோசடி செய்ததாக கூறி வி.ஏ.ஓ.வை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறையில் அடைத்தனர். அரக்கோணம் அருகே பெருமூச்சி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் குமரவேல். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதற்காக வழங்கிய அடங்கலில் முறைகேடு செய்ததாக தகவல் வெளியாகியது. இதில், சுமார் 6 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து குமரவேலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில், குமரவேலுவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்