3 குடும்பங்களின் கனவை 1 நொடியில் அறுத்து எறிந்த கார்.. 'எங்க புள்ளைங்கள திருப்பி கொடுங்க'.. கதறும் தாய்கள்

x
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் விஜய், 6 ஆம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரர் சூர்யா ஆகிய இருவரும் ஒரு சைக்கிளிலும், அதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரபீக் வேறொரு சைக்கிளிலும், கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
  • வேலூரில் இருந்து தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர், ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். கிரிசமுத்திரம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சர்வீஸ் சாலையில் பாய்ந்து, சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது அதிவேகமாக மோதியது.
  • கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 3 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காரில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்த நபர்களை மீட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்