ஆற்றில் குளித்த சிறுவர்கள் கால்களில் ஏதோ தென்பட்ட உணர்வு.."சிதிலமடைந்து இருந்த சிலைகள் | Vaniyambadi

வாணியம்பாடி பாலாற்றில் பழங்கால பெருமாள், அம்மன் உட்பட 3 கற்சிலைகள் சிதிலமடைந்த..
x

வாணியம்பாடி பாலாற்றில் பழங்கால பெருமாள், அம்மன் உட்பட 3 கற்சிலைகள் சிதிலமடைந்த நிலையில் மீட்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் கிராமத்தில், பாலாற்றில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது

அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது அவர்களின் கால்களில் ஏதோ தென்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் 3 சிலைகளை மீட்டு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இச்சிலைகள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்