"வந்தியத்தேவன் இருக்கானே.." - பொன்னியின் செல்வன் பற்றி பேசிய அமைச்சர் துரைமுருகன்

x

வேலூர் மாவட்டம், வள்ளிமலையை அடுத்த மேல்பாடியில் 13 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் துணை மின் நிலையத்தை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மேல்பாடி பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களுக்கும் விவசாயத்துக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். பொன்னின் செல்வனில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற இடங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ளன. அவற்றை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்