காவி நிறத்தில் களமிறங்கிய வந்தே பாரத்...என்ன காரணம் ?

x

சென்னை ஐ.சி.எப்-ல் காவி நிறத்தில் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்னவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயணிகளிடம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர், வந்தே பாரத் மெட்ரோ போன்ற சேவைகள் தொடங்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறினார்.

மேலும் பயணிகளிடம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவைக்கை எடுக்கப்படுவதாகவும். தேசிய கொடியில் காவி நிறம் உள்ளதால் வந்தே பாரத் ரயிலில் காவி வண்ணத்தை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்