'வணங்கான்' பட ஷூட்டிங்கில் துணை நடிகை மீது தாக்குதல் | Vanangaan

x
  • பாலா இயக்கத்தில் தயாராகும் வணங்கான் திரைப்பட துணை நடிகை மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், ஒருங்கிணைப்பாளர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
  • திரைப்பட இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. அருண் விஜய் மற்றும் ரோஷினி ஆகியோர் இதில் நடித்து வருகின்றனர்.
  • இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
  • இதில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து, துணை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார்.
  • இந்த நிலையில், 3 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
  • இதனை துணை நடிகை லிண்டா என்பவர், ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டுள்ளார்.
  • அப்போது ஆத்திரமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்