வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் முக கவசம், சமூக இடைவெளி கட்டாயம் - அமைச்சர் சேகர் பாபு

x

வைகுண்ட ஏகாதசி நாளில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சுழற்சி முறையில் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முககவசம், சமூக இடைவெளி போன்றவை நடைமுறையில் இருப்பதால் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திராவிட மாடல் ஆட்சியில் கோயில்களில் தீண்டாமை நிச்சயம் இருக்காது என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்