வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா - பால் அபிஷேகம் செய்ய நவீன ஏற்பாடு

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்ய, நவீன ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

தைப்பூசத்தன்று, முருகப் பெருமான் தாரகாசூரனை வதம் செய்த நிகழ்வு, ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்தகயை சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா, வடபழனி ஆண்டவர் கோயிலில் நாளை நடக்கிறது. அப்போது, பக்தர்கள் கொண்டு வரும் பால், மோட்டார் மூலம் பம்ப் செய்து, கருவறையில் உள்ள பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மேலும், அபிஷேகம் செய்யப்பட்ட பால், மீண்டும் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com