காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!...அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவம் - காதலன் சொன்ன ஷாக் தகவல்

x

டெல்லி ஷ்ரத்தாவை போல உத்தரபிரசேதத்தில் இளம்பெண் ஒருவர் தன் காதலனால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில் இளம்பெண் ஒருவரும் தன் முன்னாள் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். பஸ்சிம் பாட்டி கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கடந்த 15ஆம் தேதி பெண் ஒருவரின் சடலம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. தலை கிடைக்காமல் உடல் பாகங்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் அவர் ஆராதனா தெரியவந்தது. விசாரணையில் அவரின் முன்னாள் காதலன் பிரின்ஸ் யாதவ் என்பவரே கொலையாளி என தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் காதலர்களாக இருந்த நிலையில் பிரின்ஸ் வெளிநாடு சென்ற போது ஆராதனா வேறொருவரை திருமணம் செய்து கொண்டதும், அதற்கு பழிவாங்கவே ஆராதனாவை கொலை செய்ததும் தெரிய வந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்