கண்டேன் காதலை! 2.3 அடி உயரமுள்ள நபருக்கு 3 அடி உயரமுள்ள பெண்ணுடன் திருமணம்.. பிரதமர் மோடி, முதல்வர் யோகிக்கு அழைப்பு

x

உத்தரபிரதேசத்தில், பிரதமர் மோடி, முதல்வர் யோகியை திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்த இரண்டேகால் அடி உயரமுள்ள நபருக்கு, 3 அடி உயரமுள்ள பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்ட‌த்தை சேர்ந்தவர் அசிம் மன்சூரி. 2 புள்ளி 3 அடி உயரம் கொண்ட இவருக்கு பெண் கிடைக்காத‌தால், தனக்கு மணப்பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறும 2019ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதையும் அணுகியுள்ளார்.

அதன்பின்னர், கடந்த ஆண்டு புஷ்ரா என்ற 3 அடி உயர பெண்ணுக்கும், அசிம் மன்சூரிக்கும் நிச்சியம் நடைபெற்றது.

அவர்களது திருமணத்திற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் அழைப்பு விடுத்த‌தால் பிரபலமாகியிருந்தார்.

இந்நிலையில், உறவினர்கள், அப்பகுதி மக்கள் முன்னிலையில் அசிம் மன்சூரிக்கு திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, அவர்கள் முன்பு செல்பி எடுக்க அப்பகுதி மக்கள் ஏராளமானோர் குவிந்த‌தால் போலீசார் விரைந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்