கடலில் இறங்கி கடலாடிய உற்சவ பெருமாள்... பெருமாள் நாமம் உச்சரித்த பக்தர்கள்

x

மாசி மகத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் 50க்கும் மேற்பட்ட கோவிலின் உற்சவ சிலைகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது...

மாசி மாத பவுர்ணமியுடன் மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் மாசி மக உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், மாசி மக நாளான இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், மயிலாப்பூர் மாதவப் பெருமாள், எழும்பூர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட உற்சவ சிலைகளுக்கு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதேபோல, ஏராளமான மக்களும் இல்லங்களில் உள்ள சிறிய அளவிலான சாமி சிலைகளை கொண்டு வந்து வழிபாடு செய்தனர். உற்ச பெருமாள் கடலில் இறங்கி கடலாடியபோது, பக்தர்கள் பெருமாள் நாமம் உச்சரித்தவாறு வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்