கைப்பையில் அமெரிக்க டாலர்கள் - திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

x

திருச்சி விமான நிலையத்தில் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது, பயணி ஒருவர் தான் எடுத்து வந்த கைப்பையில் அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்தியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 13 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்