உ.பி. முதல்வருக்கு எதிராக மேல்முறையீட்டு மனு

x

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தலின்போது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக யோகி ஆதித்யநாத் மீது, நாவல் கிஷோர் சர்மா என்பவர் கீழமை நீதிமன்றங்களில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற மனுக்கள் நாளேடுகளில் முதல்பக்க செய்தியாக இடம் பெறுவதற்காக தாக்கல் செய்யப்படுகின்றன என்று கூறி தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்