பார்வையாளர் பகுதியில் ஒதுக்கப்படாத இருக்கை... குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி

x

புதுக்கோட்டையில் விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் அரசு நடைமுறை விதிகளின்படி ஆட்சியர், மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர், எம்பி எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிடோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல் ஏக்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, பார்வையாளர் பகுதியில் அமர்வதற்காக வந்தபோது அங்கு இருக்கை ஒதுக்கப்படாததைக் கண்டு அதிருப்தி அடைந்தார். இதையடுத்து குடியரசு தின விழாவை புறக்கணித்த எம் எம் அப்துல்லா தனது காரில் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்