நடுரோட்டில் வெட்டியும் தீராத ஆத்திரம்.. மருத்துவமனைக்குள் பெயிண்டரை கொலைசெய்த கொடூரம்

x

மேட்டூரில் முன் விரோதம் காரணமாக அரசு மருத்துவமனைக்குள்ளே புகுந்து ஒருவரை வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அடுத்த தொட்டில் பட்டியை சேர்ந்தவர் பெயிண்டர் ரகு.

இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு முன் விரோதம் காரணமாக மூன்று பேர் தாக்கியதில் மேட்டூர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்நிலையிலும் பின் தொடர்ந்து வந்த அந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ரகுவை அரிவாளால் மேலும் தாக்கி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்