தீராத கடன் தொல்லை - காவலர் எடுத்த விபரீத முடிவு

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, கடன் தொல்லை காரணமாக முதல் நிலைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாச்சல் ஊராட்சி பசுமை நகரை சேர்ந்த இன்பராஜ் என்பவர், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வந்தார். இதனிடைய, கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்த இன்பராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்