"எம்.பி.க்களின் விரும்பத்தகாத வார்த்தைகள்..." - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சு

x

விரும்பத்தகாத வார்த்தைகளை பேசுவது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிடும் என, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்...

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் 19வது மண்டல மாநாட்டின் நிறைவு விழாவில், மக்களவை சபாநாயர் ஓம் பிர்லா பங்கேற்றார்.

அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து பேசிய அவர், அரசியல் பேச்சுக்களில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிடும் என்றார்.

நாடாளுமன்றம் விவாதத்திற்கான இடம், அமளிக்கான இடம் அல்ல என குறிப்பிட்ட அவர், மக்கள் தங்களை கவனிக்கிறார்கள் என்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்