தெரியாமல் உரசிய பைக்கை விரட்டி..ஓட்டியவரை கொன்ற டிரைவர்...சென்னை அருகே பழிக்கு பழி-அதிர்ச்சி CCTV

x

ஸ்ரீபெரும்புதூர் அருகே, கார் மீது இருசக்கர வாகனம் மோதியதற்கு பழி தீர்க்க, இருசக்கர வாகனம் மீது காரை இடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, ஏழுமலை என்ற இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, இண்டிகேட்டர் போடாமல் திரும்பிய கார் மீது மோதியுள்ளனர். இதனால் காரை ஓட்டி வந்த பாங்கிராஸ் என்பவருக்கும் இருசக்கர வாகனத்தை இயக்கிய விஷ்ணுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, விஷ்ணு பைக்கில் புறப்பட்ட நிலையில், அவரை காரில் அதிவேகமாக விரட்டிச் சென்ற பாங்கிராஜ், பைக்கின் பக்கவாட்டில் இடித்துவிட்டு தப்பிச் சென்றார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஷ்ணு உயிரிழந்த நிலையில், அவருடன் சென்ற ஏழுமலை படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பாங்கிராஸை கொலை வழக்கில் கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்