திருமாவளவன் எம்பியை தாக்கி பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன்..!

x

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பாஜக சார்பில் சமூக நீதி மற்றும் 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வேங்கை வயலில் நடைபெற்ற சம்பவம் அருவருக்கத்தக்க செயல் எனவும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், சமூக நீதிக்காக பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவிடம் இது குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை . எனவே இங்கே திராவிட மாடல் ஃபெயில் ஆகிவிட்டது. இனி ஆன்மீக மாடலே நமக்கு தேவை என பேசினார்


Next Story

மேலும் செய்திகள்