காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு சென்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

x

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு சென்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய மற்றும் கலாச்சார பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாரணாசிக்கு சென்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹனுமான்காட் பகுதியில் உள்ள பாரதியாரின் இல்லத்தை பார்வையிட்டார். அங்கு நிறுவப்பட்டுள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அவர், பாரதியாரின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், குமாரசாமி மடத்தில் உள்ள கெளரி கேதாரேஷ்வர் ஆலயத்திற்கு சென்ற அவர், பூஜை செய்து வழிபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்