சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடைகள்.. அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்

x

பள்ளி மாணவர்கள் பென்சில் பிட் பேண்ட் அணிவதை தவிர்க்க அரசு பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் மாதிரி அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு டெய்லரை வரவழைத்து மாணவர்களுக்கு முறையாக அளவெடுத்து சீருடை தைத்து கொடுக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு அரசு சீருடை வழங்கி வரும் நிலையில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் சீருடைகளை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்