போலந்து மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது உக்ரைன் படைகளே... வெளியான அதிர்ச்சித் தகவல்

x

முதலில், போலந்து மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது ரஷ்யா என குற்றம் சாட்டப்பட்டது.

ரஷ்ய தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்த நிலையில், பைடன் தலைமையில் நேட்டோ நாடுகள் கூட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அந்த ஏவுகணைகள் ரஷ்யாவுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று பைடன் தெரிவித்தார்.

இந்நிலையில், போலந்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது உக்ரைன் படைகள் தான் என்றும், எதிர் வந்த ரஷ்ய ஏவுகணைகளை எதிர்த்துத் தாக்கும் நோக்கில் உக்ரைன் படைகள் ஏவுகணைகளை ஏவியதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்