"அணுகுண்டை பயன்படுத்தும் உக்ரைன்" - ரஷ்யா பரபரப்பு தகவல்

x

ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடினர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர், செர்ஜி ஷோய்கு, உக்ரைன் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸுடன்-ஐ தொலைபேசியில் அழைத்தார். அப்போது, கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் உக்ரைன் பயன்படுத்தும் என்று ரஷ்யா கவலைப்படுவதாக ஷோய்கு வாலஸிடம் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் ரஷ்யா வழங்காத போதிலும், உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் தரப்பு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்