தனது மகனின் சொந்த விஷயங்களை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

x
  • கண்ணை நம்பாதே படம் சார்ந்த நேர்காணலில் அவரது மகன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 18 வயதான தனது மகன், அவரது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்ததாக குறிப்பிட்டார்.
  • இது அவரது சொந்த விஷயம் எனவும், இதில் தலையிட எங்களது குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.
  • தங்களது மகனுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவும், இதனை கேலி செய்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கையை நகர்த்த முடியாது என தெரிவித்தார்.
  • 18 வயது சிறுவனுக்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பதையே தனது மனைவி கிருத்திகா வலியுறுத்தியதாகவும் உதயநிதி தெளிவுப்படுத்தினார்.
  • நடிகர் மாதவனின் மகன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், தனது மகனை யாருடனும் ஒப்பிடாதீர் என குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்