"உதயநிதி தமிழக மக்களின் இதய வாரிசு" - முரசொலி புகழாரம்

x

தமிழ் மக்களின் இதய வாரிசாக ஒளிர்விட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று முரசொலி நாளிதழ் கட்டுரை வெளி யிட்டுள்ளது.

அதில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது மனைவி மற்றும் ஜெயலலிதாவும், மூப்பனாருக்குப் பிறகு அவரது மகன் வாசனும், கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன்களும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களும் அரசியலுக்குள் நுழைந்தது வாரிசு அரசியலில்லையா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணாமலைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அங்கே மூத்தவர்கள் பலர் இருக்க, இன்று வந்தவருக்கு பதவியா என்று யாரும் கேட்க மாட்டார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மக்களின் பேராதரவைப் பெற்று அந்தத் தொகுதியின் வாரிசாகியுள்ள அமைச்சர் உதயநிதி, இனி அமைச்சராக ஆற்றும் பணி மூலம் தமிழ்மக்களின் இதயவாரிசாக ஒளிவிடுவார் எனவும் முரசொலி புகழாரம் சூட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்