"ஆண் பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்க்க வேண்டும்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

x
  • பகுத்தறிவோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் தின விழா நடைபெற்றது.
  • இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்திய போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
  • இதில் பேசிய எழுத்தாளர் கிரேஸ் பானு, திருநங்கைகள், திருநம்பிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் நாளுக்காக காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
  • தொடர்ந்து பேசிய மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இலவச பேருந்து திட்டம் மகளிருக்கு பல்வேறு பயன்களை அளிப்பதாக தெரிவித்தார்.
  • கவிஞர் மனுஷ்யபுத்ரன் பேசுகையில், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
  • இறுதியாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெண்கள் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்