"ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் போல மணமக்கள் வாழ வேண்டாம்" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் போல மணமக்கள் வாழ வேண்டாம்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

"கமலாயம் போகமாட்டோம்னு ரெண்டு பேரும் சத்தியம் பண்ணாங்க ஆனா.. "

"ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் போல மணமக்கள் வாழ வேண்டாம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை மாநகராட்சி ஆறாவது மண்டலம் கொசப்பேட்டை பகுதியில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து முதற்கட்டமாக ஒன்பது ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மணமக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தமிழும் கலைஞரும் போல, ஸ்டாலினும் உழைப்பும் போல வேண்டும் என வாழ்த்துவார்கள்.

ஆனால் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன் என்றார்.

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் போல் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வாழாதீர்கள்.

என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் காரில் ஏறச் சென்றார்கள்.

ஆனால் அப்போது காரில் ஏறினாலும் பரவாயில்லை கமலாலயத்திற்கு மற்றும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன்.

ஆனால் சட்டமன்றத்தில் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாலயம் போகாது என அண்ணன் ஓ பன்னீர்செல்வம் சொன்னார்.

ஆனால் நேற்று இரண்டு மணி நேரம் கார் கமலாலயத்தில் தான் இருந்தது.

இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாலயத்தில் காத்து கிடக்கிறார்கள்.

கேடுகெட்ட வெட்கமில்லாத ஒரு எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்