காரில் எரித்து கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்கள் - பிரபல யூடியூபர் மீது வழக்குப்பதிவு | Hariyana

x

அரியானாவில் காரில் வைத்து இஸ்லாமிய இளைஞர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர், பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த பிரபல யூடியூபர் என்பது தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜூனைத் என்ற இளைஞர்களை காணவில்லை என தேடி வந்த நிலையில், இருவரும் அரியானாவில் காரில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஜூனைத் மீது பசுக்களை கடத்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே, பஜ்ரங் தளம் கட்சியை சேர்ந்த பசு பாதுகாவலர்கள், இரு இளைஞர்களையும் கொலை செய்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், ரின்கு சாய்னி என்பவரை கைது செய்த போலீசார், பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில், மோனு மனேசர் என்பவர் பிரபல யூடியூபர் என்பதும், அவர் பசு பாதுகாப்பு குறித்து பல வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டதும் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்