பெண்ணிடம் செல்போன் பறிப்பு... காட்டிகொடுத்த சிக்னல் - வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்

x

அருமனை அருகே செம்மங்காலை பகுதியை சேர்ந்தவர் பரிமளம். இவர் அதே பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் பணி புரிந்து வரும் நிலையில், இவரிடம் இரு இளைஞர்கள் சாலையில் செல்லும் போது செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, புகாரின் அடிப்படையில் செல்போன் சிக்னல் மூலம் கொள்ளையர்களை தேடி வந்த போலீசார், கேரளாவை சேர்ந்த அபின்ராய் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், உயர் ரக செல்போனை பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையில் செல்போனை திருடியதாக இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்