நேருக்கு நேர் மோதிய டூவீலர்கள்...இரு தரப்பினர்கள் பயங்கர மோதல்..போலீசாருக்கே போக்கு காட்டிய மக்கள் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. நியூடில்லி பகுதியை சேர்ந்த ஹைதர் அலி என்பவர் இரு சக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே இரண்டு பேருடன் வந்த இரு சக்கர வாகனம் அவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை களைக்க முற்பட்ட போது, சமாதானம் அடையாத அவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்