சிவகிரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், லட்சுமிபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆனந்த் என்பவரின் வீட்டில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்