சித்திரை திருவிழாவில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர்... மதுரையில் பரபரப்பு

x

மதுரை சித்திரை திருவிழாவின் போது, சந்தேகத்துக்குரிய வகையில் கை துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை தெப்பக்குளம் வைகையாற்று கரையோர சாலை பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் இருவர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, சென்னை மேற்கு அண்ணாநகரைச் சேர்ந்த தனசேகர் மற்றும் மதுரை கோமதிபுரம் ஆவின்நகர் பகுதியை சேர்ந்த சுபாஸ் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்