வேண்டுமென்றே போலீஸ் மீது வாகனத்தை ஏற்றிய இருவர்..பட்டுக்கோட்டையில் பரபரப்பு..

x

பட்டுக்கோட்டையில், மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது வாகனத்தை மோதி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பண்ணவயல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக மணல் கடத்தி வந்த வாகனத்தை ஆய்வு செய்ய முயன்ற போது, வாகனத்தை நிறுத்தாமல் போலீசார் மீது மோதி விட்டு, இருவர் தப்பிச் சென்றனர். இதில், காயமடைந்த போலீசார் இருவர், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளர் ராஜா என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்