வனச்சரகர் கொலை வழக்கு: 32 ஆண்டுகள் கடுங்காவல்..! - வீரப்பனின் கூட்டாளிகள் இருவர் விடுதலை

வனச்சரகர் கொலை வழக்கில், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலத்தில் வனச்சரகராக பணியாற்றிய சிதம்பரம், கடந்த 1987-ஆம் ஆண்டு, சந்தன கடத்தல் வீரப்பனின் ஆட்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், வீரப்பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவடத்தை சார்ந்த பெருமாள், சேலம் மாவட்டத்தை சார்ந்த ஆண்டியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மாதையனுக்கு ஆயுள் தண்டனையும், மற்ற இருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வீரப்பனின் அண்ணன் மாதையன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மற்ற இருவரையும் சனிக்கிழமை விடுதலை செய்ய உத்தரவு வந்த நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com