உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக இரு நீதிபதிகள் - குடியரசுத் தலைவர் உத்தரவு

x

உச்சநீதிமன்றத்திற்கு இரு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5-ஆம் தேதி கூடிய உச்சநீதிமன்ற கொலீஜியம், தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வெங்கட்நாராயண பாட்டி ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்