பல்லை பிடுங்கிய விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் இருவர் புகார் மனு

x

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங் மற்றும் இதர காவலர்கள் விசாரணை என்ற பெயரில் அழைத்து வரப்பட்டவர்களின் பல்லை பிடுங்கியதாக கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஏற்கெனவே புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், சென்னையை சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவரும், ஹைதராபாத்தை சேர்ந்த மற்றொருவரும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்