காணாமல் போன இரண்டரை வயது குழந்தை... 2 நாள்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

x

கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன இரண்டரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், நாச்சியார்பேட்டை கிராமத்தில் இரண்டரை வயது சிறுவன் அபிநாத், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிகிறது.

இதனிடையே, காணாமல் போன சிறுவன் அருகில் இருந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்