'குக்கர் கொலையில்' திகில் திருப்பம்.. காதலன் வாக்குமூலம்..விழிபிதுங்கிய போலீஸ் - திடீர் என்ட்ரி கொடுத்த சகோதரி..ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்..

x

மும்பையில், லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி, குக்கரில் வேக வைத்த சம்பவத்தில், காதலன் அளித்த பகீர் வாக்குமூலம், போலீசாரையே திணறடிக்க வைத்துள்ளது. அதனை விரிவாக பார்ப்போம்...

மும்பை தானேவின் பாயந்தர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து, பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, உடல் பாகங்கள் குக்கரில் வேகவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில், அந்த பெண் 32 வயதான சரஸ்வதி வைத்யா என்பதும், 56 வயதான மனோஜ் சானே என்பவருடன் லிவ்விங் உறவில் வாழ்ந்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், வாக்குவாதத்தின்போது, மனோஜ் சானே, சரஸ்வதி வைத்யாவை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மனோஜை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியபோது, பகீர் தகவல்கள் வெளியாகின.

மனோஜ்தான் கொன்றதாக கூறப்பட்ட நிலையில், தான் கொலை செய்யவில்லை எனவும், சரஸ்வதி வைத்யா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், பகீர் குண்டை போட்டுள்ளார்.

போலீசாரிடம் இருந்து தப்பிக்கவே, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, பிரஷர் குக்கரில் வேக வைத்ததாக மனோஜ் காவல்துறையிடம் கூறியுள்ளார்.

அதே நேரம், கடந்த 2008 ஆம் ஆண்டு, விபத்தில் காயமடைந்த நிலையில், உடலில் செலுத்திய ரத்தத்தால், தனக்கு ஹெச் ஐவி பாஸிடிவ் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அன்று முதல் தொடர்ந்து அதற்கான மருத்துவம் எடுத்து வருவதாகவும் காவல்துறையிடம் மனோஜ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரஸ்வதி வைத்யா தன் மீது அதிக அன்பு கொண்டிருந்ததாகவும், தான் அவரை ஏமாற்றுவதாக நினைத்து, அடிக்கடி தன் மீது சந்தேகம் கொண்டார் என்றும் மனோஜ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், குழப்பம் ஏற்படுத்தும் விதமாக, சரஸ்வதி வைத்யா தனக்கு மகள் போன்றவர் எனவும், அவர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத திட்டமிட்டிருந்ததால், கணித பாடத்தை கற்பித்து வந்ததாகவும் கூற, மனோஜின் வாக்குமூலம், போலீசாரையே விழிபிதுங்க வைத்தது.

இதற்கு நடுவே, உயிரிழந்த சரஸ்வதிக்கு யாருமே இல்லை என முதலில் சொல்லப்பட்ட நிலையில், மனோஜுடன் காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, சரஸ்வதியின் சகோதரி என பெண் ஒருவர் என்ட்ரி கொடுத்தார்.

சரஸ்வதியும் மனோஜும் லிவ்விங் உறவில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்தாகவும், 24 வயது வித்தியாசம் என்பதால், இவர்களது திருமணத்தை, சரஸ்வதி தன்னிடம் மட்டுமே கூறியதாகவும், அவர் கூற, போலீசாருக்கு ஷாக்கிற்கு மேல் ஷாக்...

மனோஜின் வாக்குமூலத்தில் பெரும் சந்தேகம் இருப்பதாக கூறும் போலீசார், விசாரணையை திசை திருப்புவதற்காகவே, அவர் குழப்புவதாக தெரிவிக்கின்றனர். சரஸ்வதியின் உடல் பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணைக்குப் பிறகு உண்மைகள் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்