"படிக்க சொல்லி அடிக்கடி டார்ச்சர் செய்றாங்க"... தந்தையின் ஸ்கூட்டி உடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்... மாணவனின் அறையில் கிடைத்த கடிதம்

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்றோர் படிக்க சொல்லி வற்புறுத்தியதால், பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டை விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளச்சல் அருகே மேற்கு நெய்யூரை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன், தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவில் இருந்த 7 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மாயமானதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, மாணவனின் அறையை சோதனை செய்தபோது, கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அதில், பெற்றோர் தன்னை படிக்க சொல்லி அடிக்கடி டார்ச்சர் செய்வதால் வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், கண்காணாத இடத்தில் சிறிய வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன் என்றும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்