"ஜன.27 வெய்ட் பண்ணுங்க.. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணையலாம்" - பரபரப்பை கிளப்பும் டிடிவி தினகரன்

ஜன.27 வெய்ட் பண்ணுங்க.. ஓபிஎஸ், ஈபிஎஸ் இணையலாம் - பரபரப்பை கிளப்பும் டிடிவி தினகரன்
x


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக நிலைப்பாடு குறித்து ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அமமுக சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் 27ஆம் தேதி முழு நிலைப்பாடு அறிவிப்பதாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கேற்ப கூட்டணி வியூகங்கள் வகுக்கப்படும் என்றும் சொல்லியுள்ளார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை முடக்கப்படும் என எச்சரித்துள்ளார். இரட்டை இலை இருந்ததாலேயே எதிர்க்கட்சி அந்தஸ்து அதிமுகவுக்கு கிடைத்தது என்றும் அவர் கூறினார். அதேபோல தேர்தலில் போட்டியிட தான் எப்போதும் தயங்கியது இல்லை என்பதால் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவும் தயார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அறிமுகமே இல்லாத ஆர்கே நகரில் ஜெயித்தது போல் ஈரோட்டிலும் அமமுக ஜெயிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்