உலக‌க் கோப்பை கால்பந்து போட்டியை நேரடியாக ஒளிபரப்ப முயற்சி.. ஏமாற்றமடைந்த மக்கள்

x

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரை யாரும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று, உரிம‌ம் பெற்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த‌து.

இந்நிலையில், உலக‌க் கோப்பை இறுதிப் போட்டியை பெரிய திரையில் நேரலையில் ஒளிபரபரப்ப என்எல்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த‌து.

போட்டியை காண என்எல்சி நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் உட்பட பலர் சென்றனர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த தகவல் கிடைத்த‌தால், நேரலை ஒளிபரப்பும் முயற்சி கைவிடப்பட்டது.

இதனால், அரங்கத்திற்கு வந்திருந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்