மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்க முயற்சி..இரும்பு பைப்பால் அடித்தே கொன்ற ஊழியர்..பரபரப்பு சம்பவம்

x

வேதாரண்யத்தில் 'ப்ரியம்' என்ற பெயரில் குடிநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் இயங்கி வந்துள்ளது. இங்கிருந்த குடிநோயாளியான முருகேசன் என்பவர், சந்தேகத்திற்கிடமாக நேற்று முன் தினம் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. மறுவாழ்வு மையத்தில் இருந்து முருகேசன் உட்பட 4 பேர் தப்பிக்க முயன்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள், முருகேசனை கட்டிவைத்து இரும்பு பைப்பால் தாக்கியதும், அதனால் முருகேசன் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மறுவாழ்வு மைய உரிமையாளர் மணிகண்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்