"உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" - எம்பி ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி

x

சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தேனி எம்பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தேனி அருகே உள்ள எம்பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.

இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, வனத்துறை ரவீந்திரநாத்துக்கு சம்மன் அனுப்பியது.

அதன்படி, தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவிந்திரநாத், ஆஜரானார். அவரிடம் 3 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்