பல்லடத்தில் டவுசர் கொள்ளையர்கள்..பரபரப்பை ஏற்படுத்தும் CCTV காட்சி

x

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இரவு நேரத்தில் முகமூடி அணிந்தபடி பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாடுவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள சின்னையா கார்டன் பகுதியில் நேற்று நள்ளிரவு, முகமூடி அணிந்து அரைக்கால் டவுசருடன் கையில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர், ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு சென்றனர். இதனால் பீதி அடைந்துள்ள அப்பகுதி மக்கள், போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், மர்ம நபர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்