தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்..."கற்களை வைத்த இடைத்தரகர்கள்"-ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி

x

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க இடைத் தரகர்கள் கற்களைப் போட்டு வரிசையில் இடம் பிடிப்பதால் நேரில் வந்து டிக்கெட் எடுப்பவர்கள் பாதிக்கப்படுவதாக இணையத்தில் தகவல் பரவியது. இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் உத்தரவின் படி இருப்புப் பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் முன்பதிவு கவுன்டர்களில் ஆய்வு மேற்கொண்டனர். போலியான முகவரி பெயர் ஆகியவையுடன் கற்களை வைத்திருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதோடு கற்கள் விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்