தொடர்ந்து 5வது தோல்வியை தழுவிய திருச்சி... பந்துவீச்சில் மிரட்டிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ப்ளே-ஆஃப் பந்தயத்தில் காத்திருக்கும் நம்பிக்கை

x

தனது கடைசி லீக் ஆட்டத்தை திருச்சி அணிக்கு எதிராக விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ், முதலில் பேட்டிங் செய்து 130 ரன்கள் எடுத்தது.

அணியில் அதிகபட்சமாக ஆர். சிபி 31 ரன்கள் விளாசினார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய திருச்சி அணி, சிலம்பரசனின் சுழலில் தாக்குபிடிக்க முடியாமல் 13.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு சுருண்டது.

சிறப்பாக பந்து வீசிய சிலம்பரசன் 3 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து ப்ளே ஆஃப் பந்தயத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் நீடித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்