கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவன்.. நீண்ட நேரமாகியும் மீட்காததால் ஆத்திரம்..!கதறும் உறவினர்கள்

x
  • திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவனை தேடும் பணியில், போலீசார் மெத்தனம் காட்டுவதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணன், அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
  • தனது நண்பர்களுடன் மங்கம்மாள்புரம் படித்துரை கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக சரவணன் தண்ணீரில் மூழ்கினார்.
  • தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற லால்குடி போலீசார், தீயணைப்பு மீட்பு குழுவினர், சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
  • ஆனால், நீண்ட நேரமாகியும் மாணவனை மீட்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், லால்குடி - திருக்காட்டுப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
  • மேலும், போதிய உபகரணங்கள் இன்றி, தேடுதல் பணியில் மெத்தனம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினர்.
  • இதனிடையே, உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்