சிவனே-ன்னு நடந்து போன பாட்டி.. நொடியில் அடித்து தூக்கிய கார்.. திருச்சியில் பரபரப்பு

x

த ிருச்சி மாம்பழச்சாலை அருகே, அதிவேகமாக வந்த கார் மோதியதில், மூதாட்டி உள்பட இரண்டு பெண்கள் காயமடைந்தனர். திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார், மேரி என்ற மூதாட்டி மீது மோதியது. மேலும், சாலையில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதியதுடன், சாலையோரம் உள்ள வீட்டின் சுவற்றின் மீதும் மோதியது. இதில், கால் எலும்பு முறிவு ஏற்பட்ட மூதாட்டி உள்பட இரண்டு பெண்கள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ரமேஷை பொதுமக்கள் தாக்க முயன்ற போது, போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்